லிபியா கடற்கரையில் கவிழ்ந்த அகதிகள் படகு: 50 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம்?
லிபியக் கடற்கரை அருகே படகு கவிழ்ந்த விபத்தில் 50 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
50 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம்?
லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 60 அகதிகளுடன் வந்த சிறிய படகு கவிழ்ந்ததில் பெண்கள் குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்து இருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை டோப்ரூக் அருகே உள்ள பார்டா தீவு பகுதியில் இந்த விபத்து சம்பவமானது ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது படகில் இருந்த 10 பேர் நீந்திச் சென்று அருகில் உள்ள தீவில் கரையேறியுள்ளனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீதமுள்ள 50 பேர் நிலை தற்போது வரை என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாழ்வாதாரங்களை தேடி மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு அகதிகளாக வரும் மக்கள், சிறிய படகில் இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
கடந்த மாதம் இதே பகுதியில் நடந்த மற்றொரு படகு விபத்தில் 51 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |