என்னை பவுன்சர் போட்டு கொன்றுவிடாதே! அக்தரிடம் கெஞ்சிய இலங்கை வீரர்: அவரே சொன்ன தகவல்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்தர், ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
உலக கிரிக்கெட்டில் அதிவேக பந்து வீச்சாளர் என்றால் இப்போது வரை அந்த இடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் தான்.
இவர் கடந்த 2003-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மணிக்கு 161.3 கி. மீற்றர் வேகத்தில் பந்து வீசிய அவர் இன்றளவும் அதிவேக பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தான் பந்துவீசியதிலேயே கடினமான பேட்ஸ்மேன், இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் தான் என்று கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்தில் அக்தர் கூறுகையில்,முரளிதரன் தான் நான் பந்துவீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென். இதை விளையாட்டுக்கு கூறவில்லை. இது உண்மை.
ஒரு முறை முரளிதரன் என்னிடம் வந்து நீ பவுன்சர் போட்டு என்னை கொன்று விடாதே நான் பேட்டிங் செய்யும்போது தயவுசெய்து பாலை கொஞ்சம் மேலே போடு என்று சொன்னார்.
நானும் அதன்படி கொஞ்சம் மேலே பந்தை வீச அவர் என்னுடைய பந்தை அடித்து விட்டார். பின்னர் என்னிடம் வந்து நான் தவறுதலாக உன் பந்தை அடித்து விட்டேன் சாரி என்று என்னிடம் சொன்னதாக கூறியுள்ளார்.