நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்க இது தான் சரியான நாள்! பாகிஸ்தான் அணியை தூண்டிவிடும் முன்னாள் வீரர்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர், நியூசிலாந்தை பழிவாங்க இது தான் சரியான நாள் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி சமீபத்தில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருந்தது.
ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, திடீரென்று நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்வதாக அறிவித்து, பாகிஸ்தானில் இருந்து நியூசிலாந்திற்கு திரும்பியது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பெரும் தோல்வியாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.
Remember the date guys. This is where you respond to them with full strength. pic.twitter.com/ZSDgsfUu7j
— Shoaib Akhtar (@shoaib100mph) September 18, 2021
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் மாலிக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், வரும் அக்டோபர் 26-ஆம் திகதியை பாகிஸ்தான் வீரர்கள் மறந்துவிடாதீர்கள், அன்று முழு பலத்துடன் நியூசிலாந்திற்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, நியூசிலாந்து அணி திடீரென்று தொடரை ரத்து செய்துவிட்டதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
அதை மனதில் வைத்தே சோயிப் அக்தர் இந்த டுவிட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.