பிரித்தானியாவில் பட்டப்பகலில் கொடூர சம்பவம்: சிறார்கள் கண் முன்னே நடந்த துயரம்
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் பட்டப்பகலில் தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த அதே தெருவில், கொல்லப்பட்ட நபரின் இரு பிள்ளைகள் இளவரசி உடையில் விளையாடியபடி இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
2018ல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் தற்போது முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இரு பிள்ளைகளுக்கு தந்தையான 31 வயது கிரஹாம் என்பவரையும் அவரது நண்பரையும் ஒருவர் போதை மருந்து தொடர்பில் வியாபரம் பேசுவதற்காக அழைத்து சென்றுள்ளார்.
சுமார் 4.30 மணியளவில் அந்த நபர் குறிப்பிட்ட முகவரிக்கு இந்த இருவரையும் அழைத்துச் செல்ல திடீரென்று அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட கிரஹாம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஐவர் சிறை தண்டனை பெற்றுள்ளனர். 27 வயதான Callum Halpin என்பவர் இதுவரை தலைமறைவாக உள்ளார். குறித்த இளைஞர் பிரித்தானியாவின் மிகவும் தேடப்படும் 12 குற்றவாளிகளில் ஒருவர் என அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது.