பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும் என நம்பி ஓவராக வாய்விட்ட ஹர்பஜன்சிங்! தோல்விக்கு பின்னர் அக்தர் தந்த பதிலடி... வீடியோ
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வியடைந்த நிலையில் ஹர்பஜன் சிங்குக்கு, பாகிஸ்தான் வேகப்பந்து ஜாம்பவான் சோயிப் அக்தர் பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடரின் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் சோயிப் அக்தரிடம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு வாக்ஓவர் வழங்க வேண்டும் என கிண்டலாக கூறினார்.
ஆனால் போட்டியின் முடிவில் இந்திய அணியை அடித்து துவைத்து பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து ஹர்பஜன் சிங்கிற்கு அக்தர் பதிலடி கொடுத்துள்ளார்.
போட்டி முடிந்த பின்னர் அவர் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில், இப்போ பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வாக் ஓவர் கொடுக்க வேண்டுமா? ரிலக்ஸ் செய்து இந்த நாளை மகிழ்ச்சியாக செலவிடுங்கள் ஹர்பஜன் சிங் என தெரிவித்துள்ளார்.
Haanji? Walk over chahiye tha @harbhajan_singh ? pic.twitter.com/6XSc5cpcPp
— Shoaib Akhtar (@shoaib100mph) October 24, 2021