தலை முடி குட்டையாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து தாக்கும் தென் கொரிய ஆசாமி!
தென் கொரியாவில் குட்டையான முடி கொண்ட பெண்கள் மற்றும் இளம் பெண்களை தாக்கிவந்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.
தலை முடி குட்டையாக இருக்கும் பெண்களைக் கண்டால் அவருக்கு பைத்தியம் பிடிக்கும். அவர்களின் தலைமுடியைப் பிடித்து அடித்துக் கொண்டிருந்தார். இந்த வித்தியாசமான நடத்தையுடன் பெண்களை தாக்கிய அந்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.
காரணம் கேட்டதற்கு ஒரு அதிர்ச்சியூட்டும் பதிலைக் கொடுத்துள்ளார். குட்டை முடி கொண்ட பெண்களை அவர் பெண்ணியவாதிகள் என்று கருதுகிறார். அதனால் தான் தாக்குகிறார். அவரது காரணத்தை கேட்டு பொலிஸாரும் அதிர்ந்தனர்.
விசாரணையின்போது, அந்த நபர், "நான் ஒரு ஆண் பேரினவாதி, பெண்ணியவாதிகள் தாக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
பெண்ணைத் தாக்கும்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, அவருக்கு ஸ்கிசோஃப்ரினியா (ஒரு நபரின் சிந்தனை, உணர மற்றும் தெளிவாக நடந்துகொள்ளும் திறனை பாதிக்கும் ஒரு மூளைக் கோளாறு) இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Short Hair Means Feminism, South Korean Man Attacks Woman, male chauvinist