நான் நினைத்ததையே டிராவிட் என்னிடம் சொன்னர்! நியூசிலாந்தை கதற விட்ட ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் அது குறித்து கூறியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி, கான்பூரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணிக்கு இளம் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து 105 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்து 65 ஓட்டங்கள் குவித்து அணிக்கு பெரிதும் உதவினார்.
இது குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில், இக்கட்டான நிலையில் இருந்தது. இது போன்ற இக்கட்டான நிலையில் நான் பலமுறை பேட்டிங் செய்து உள்ளேன்.
ஆனால், அது இந்திய அணிக்காக அல்ல, ரஞ்சி கோப்பை போட்டிகளின் போது இதே போன்ற சூழ்நிலையில் நான் நிறைய முறை விளையாடி உள்ளேன். அந்த அனுபவத்தை அப்படியே இந்த போட்டியிலும் வெளிப்படுத்தி விளையாடினேன்.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நான் களமிறங்குவதற்கு முன்னர் டிராவிட் என்னிடம் வந்து, உன்னால் எவ்வளவு பந்துகளை எதிர்கொள்ள முடியுமா அவ்வளவு பந்தை எதிர்கொள் என்று கூறினார்.
நானும் அதையே தான் நினைத்திருந்தேன். என் மனதுக்குள் இன்றைய நாளில் எவ்வளவு அதிகமான பந்துகளை சந்திக்க முடியுமோ அவ்வளவு பந்துகளை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
டிராவிட் சாரும் அதையே கூறியதால், என்னால் நல்லதொரு ஆட்டத்தை கொடுக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.