சண்டையில் தோற்றுவிட்டோம்; ஆனால் போரில் தோற்கவில்லை - பஞ்சாப் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர்
நாங்கள் திட்டமிடல் அடிப்படையில் என்ன செய்தாலும் அது சரியாக இருந்தது என்று நினைக்கிறேன் என பஞ்சாப் கிங்ஸ் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் தோல்வி குறித்து தெரிவித்தார்.
பஞ்சாப் படுதோல்வி
நேற்று நடந்த ஐபிஎல் குவாலிபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 101 ஓட்டங்களில் ஆல்அவுட் ஆனதால் இது படுதோல்வியாக அமைந்தது.
போட்டிக்கு பின்னர் பேசிய பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் "போரில் தோற்கவில்லை" என்று குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், "மறக்க வேண்டிய நாள் அல்ல, ஆனால் மீண்டும் Drawing boardக்கு செல்ல வேண்டிய நாள். நாங்கள் (முதல் இன்னிங்ஸில்) நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். பின்னோக்கிச் சென்று படிக்க நிறைய இருக்கிறது.
நேர்மையாக கூற வேண்டுமென்றால், எனது முடிவுகளை நான் சந்தேகிக்கவில்லை. நாங்கள் திட்டமிடல் அடிப்படையில் என்ன செய்தாலும், மைதானத்திற்கு வெளியே என்ன செய்தாலும், நாங்கள் என்ன செய்தாலும் (திட்டமிடல்) சரியாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
சண்டையில் தோற்றுவிட்டோம்
மேலும் அவர், "களத்தில் அதை செயல்படுத்த முடியவில்லை. பந்துவீச்சாளர்களைக் கூட குறை கூற முடியாது, ஏனெனில் அது தற்காப்புக்கு குறைந்த ஸ்கோராகும். குறிப்பாக, இந்த விக்கெட்டில் எங்கள் துடுப்பாட்டத்தில் நாங்கள் உழைக்க வேண்டும்.
நாங்கள் இங்கு விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் சில மாறி பவுன்ஸ்கள் உள்ளன. இதுபோன்ற காரணங்களை நாங்கள் கூற முடியாது. ஏனென்றால் நாங்கள் நாள் முடிவில் தொழில்முறை வீரர்கள், சூழ்நிலைக்கு ஏற்ப துடுப்பாட்டம் செய்ய வேண்டும், அதற்கு ஏற்ப இருக்க வேண்டும். நாங்கள் சண்டையில் தோற்றுவிட்டோம், ஆனால் போரில் அல்ல" என தெரிவித்துள்ளார்.
சூன் 1ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில், எலிமினேட்டர் வெற்றியாளருடன் பஞ்சாப் கிங்ஸ் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |