உணவு வாங்க சென்ற தாயார்: ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி மரணமடைந்த 4 சகோதரர்கள்
மெக்சிகோ நாட்டில் குடியிருப்பொன்று தீக்கிரையான சம்பவத்தில், நாங்கு இளம் வயது சிறார்கள் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பில் தீ
குறித்த சம்பவத்தின் போது அந்த சிறுவர்களின் தாயார் உனவு வாங்க வெளியே சென்றுள்ளதாகவும், அப்போதே குடியிருப்பில் தீ பற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மரணமடைந்துள்ள சிறார்களில் இளையவருக்கு 2 வயது என்றும் மூத்தவருக்கு 11 வயது என்றும் தெரிய வந்துள்ளது. திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு, அதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவே விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரவு உணவு வாங்க Sarai Santiago வெளியே சென்றிருந்தார், தந்தையும் வேலை நிமித்தம் நகருக்கு வெளியே இருந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் இருந்து கரும்புகை கிளம்ப, பிள்ளைகள் நால்வரும் அலறும் சத்தமும் கேட்டுள்ளது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவசர உதவி சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அப்பகுதி மக்கள் சுவற்றில் துளையிட்டு அந்த சிறார்களை வெளியேற்ற முயன்றுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மூச்சு பேச்சு இல்லாத நிலையிலேயே அவர்களை மீட்க முடிந்துள்ளது.
மரணத்திற்கு காரணம்
தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினர், சிறார்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
வீட்டின் கதவு உள்ளே மற்றும் வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அந்த சிறார்கள் நால்வரும் தப்ப முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், அந்த சிறார்கள் நால்வரும் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கரும்புகையை சுவாசித்ததால் சிறார்கள் நால்வரும் இறந்துள்ளதாக உடற்கூறு ஆய்விலும் தெரிய வந்தது. இந்த நிலையில், தாயாரின் கவனக்குறைவே பிள்ளைகள் நால்வரின் மரணத்திற்கு காரணம் என அதிகாரிகள் தரப்பு விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அந்த தாயார், நான்கு பிள்ளைகளை கொத்தாக பலிகொடுக்கும் நிலை எவருக்கும் வரவேண்டாம் என விரும்புவதாக பதிலளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |