ஆரஞ்சு பழம் அதிகமாக சாப்பிட்டால் இந்த பக்க விளைவுகள் எல்லாம் வருமாம்.. உஷாரா இருங்க!
பழங்களில் பலவகையான பழங்கள் இருக்கின்றன. அதில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் ஆரஞ்சு.
ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த பழத்தில் ப்ரோட்டீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது.
இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. ஒரு சில பக்கவிளைவுகளை இது ஏற்படுத்தும்.
தற்போது அதிகமாக ஆரஞ்சு பழத்தினை எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- ஒருவர் தினமும் 4 முதல் 5 ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டால், அதனால் உடலில் நார்ச்சத்து அதிகரிக்கும். இது வயிற்று வலி, தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
- வைட்டமின் சியை அதிகமாக எடுத்துக்கொள்வது நெஞ்செரிச்சல், வாந்தி, தூக்கமின்மை மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
- ஆரஞ்சு பழங்கள் அதிகமாக அமிலத்தன்மை கொண்டவை, இது உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் (ஜி.யி.ஆர்.டி) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தலாம். எனவே இவர்கள் எடுத்து கொள்ள கூடாது.
- சில சந்தர்ப்பங்களில் அரிதாக வாந்தி மற்றும் நெஞ்செரிச்சலை ஆரஞ்சு பழம் ஏற்படுத்துகிறது.
- உடலில் அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளவர்களுக்கு ஆரஞ்சு பழம் பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஆனால் உடலில் ஏற்கனவே அதிகப்படியான அளவில் பொட்டாசியல் இருந்தால், அதோடு ஆரஞ்சு பழத்தை சாப்பிடும்போது ஹைபர் கேமியா எனும் தீவிர உடல்நிலை பிரச்சனைகள் ஏற்படலாம்.
எத்தனை சாப்பிடலாம்?
தினமும் கூட கொஞ்சமாக ஆரஞ்சு பழம் எடுத்துக் கொள்ளலாம். அதிகப்பட்சமாக ஒரு நாளைக்கு 1 முதல் 2 ஆரஞ்சுகளை உட்கொள்ளலாம். அதற்கு மேல் உட்கொள்ளக்கூடாது.