ரஷ்யா விரைவில் அடுத்த தாக்குதலுக்கு தயாராவதற்கான அறிகுறிகள்: நிபுணர் குழு பரபரப்பு தகவல்
ரஷ்யா விரைவில் உக்ரைன் மீது அடுத்த தாக்குதலை நிகழ்த்தத் தயாராவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அமெரிக்க நிபுணர் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
ஒத்த கருத்து
மேற்கத்திய வட்டாரம், உக்ரைன் மற்றும் ரஷ்ய தரப்பு என அனைத்துமே, ரஷ்யா விரைவில் உக்ரைன் மீது அடுத்த தாக்குதலை நிகழ்த்தத் தயாராவதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாக The Institute for the Study of War என்னும் அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த தாக்குதல் அடுத்த சில மாதங்களில் இருக்கலாம் என அந்த அமைப்பு கருதுகிறது.
நேட்டோவின் கருத்து
நேற்று நேட்டோ அமைப்பின் போதுச்செயலரான Jens Stoltenberg, ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்குத் தயாராவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்றும், அதற்கு எதிராக வேண்டுமானால் ரஷ்யா செயல்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ 200,000 போர் துருப்புக்களை தயார் செய்யலாம் என்றும், அது தொடர்ந்து ஈரான் மற்றும் வட கொரியாவின் உதவியுடன் ஆயுதங்களை சேகரித்துக்கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், உக்ரைன் இராணுவத் தலைவரான Ivan Tymochkoவும், ரஷ்யப்படைகள் டான்பாஸ் பகுதியில் தங்கள் கூடுகையை பலப்படுத்தி வருவதாகவும், உள்நாட்டில் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக, வெற்றி பெற்றேஆகவேண்டும் என்பதற்காக மீண்டும் தாக்குதல் நடத்தவேண்டிய கட்டாய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தரப்பிலிருந்து சில சமூக ஊடகவியலாளர்கள், உண்மையில், ரஷ்ய தரப்பில் முக்கியப் படைகள் இன்னமும் போரில் குதிக்கவில்லை என்னும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளன.
ஆக மொத்தத்தில் அனைவருடைய கருத்துமே, ரஷ்யா விரைவில் உக்ரைன் மீது அடுத்த தாக்குதலை நிகழ்த்தத் தயாராவதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவே அமைந்துள்ளதாக The Institute for the Study of War அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..