சிங்கப்பூரில் வசிக்கும் இரண்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை உறுதி! உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சிங்கப்பூரில் போதை மறுத்து கடத்தல் விவகாரத்தில் இந்தியர்கள் இரண்டு பேருக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கமல்நாதம் முனியாண்டி மற்றும் பிரவினாஷ் சந்திரன் ஆகிய இரண்டு பேரும் சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1.3 கிலோ போதைப்பொருளை மலேசியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்திற்காக இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் கடத்தி வந்த போதைப்பொருளை வாங்கிய சந்துரு சுப்ரமணியம் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் கமல்நாதம் முனியாண்டி மற்றும் சந்துரு சுப்ரமணியம் ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனையும், பிரவினாஷ் சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 3 பேரும் சிங்கப்பூர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து கமல்நாதம் முனியாண்டி மற்றும் சந்துரு சுப்ரமணியம் ஆகிய 2 பேரின் மரண தண்டனையையும், பிரவினாஷ் சந்திரனின் சிறை தண்டனையையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.