சிங்கப்பூரில் இந்த பணிக்கு ஆள் சேர்த்துவிட்டால் $12,000 பரிசு! வெளியான ஒரு அறிவிப்பு
சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியரை பணியமர்த்த உதவும் ஊழியர்களுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மருத்துவமனைகளில் செவிலியருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனை ஒன்று, செவிலியரை பணியமர்த்த உதவும் ஊழியர்களுக்கு finder's fee என்ற பெயரில் $12,000-ஐ பரிசு தொகையாக அறிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய் செவிலியர்களின் பற்றாக்குறையை மோசமாக்கியுள்ளது, ஏனெனில் அவர்களில் அதிகமானோர் தங்கள் வேலையை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களின் தேவை அதிகரித்து வருகிறது.
சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு நிரந்த குடியுரிமை வழங்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் இங்கு ஒன்றிரண்டாண்டுகள் வேலை செய்துவிட்டு அந்த பணி அனுபவத்தைக் கொண்டு கனடா போன்ற நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர் என தனியார் மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மூத்த சுகாதார அமைச்சர் ஜனில் நாடாளுமன்றத்தில் இந்த மாத தொடக்கத்தில் பேசினார். அவர் பேசுகையில், 2021 இன் முதல் பாதியில் சுமார் 1,500 சுகாதாரப் பணியாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என கூறினார்.
அதாவது ஆண்டுக்கு 2000 செவிலியர் ராஜினாமா என்பது இந்த ஆண்டில் 6 மாதங்களிலேயே 1500 கடந்துவிட்டதால் சுகாதாரத் துறை கவலையில் ஆழ்ந்துள்ளது.
தங்கள் குடும்பத்தினரை காண செல்ல முடியாத காரணத்தாலும் வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் ராஜினாமா செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.