இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய பயண விதிகள் அறிமுகம்! வெளியான முக்கிய தகவல்
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கு பயண தடையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனாவை கட்டுக்குள் வைக்க பயண தடைகளை அறிவித்தது.
இந்நிலையில் நோய் பரவல் வேகம் குறைந்துள்ளதால் அதற்கேற்ப தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இதற்கு முன்னர் இந்தியா, வங்கதேசம், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மேலும் 14 நாட்களில் இந்த குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு தங்கள் நாட்டில் இடமில்லை என்று அந்நாட்டு அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் அந்நாட்டு அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது. வருகின்ற அக்டோபர் 27 முதல் இந்தியா, வங்கதேசம், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டுக்கு வரலாம்.
அதுமட்டும் இல்லாமல் சிங்கப்பூரில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லவும் அனுமதி வழங்கபட்டுள்ளது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்துதல் அவசியம் என்று தெரிவித்துள்ளது.