கழிவுநீரில் இருந்து பீர் தயாரிக்கும் நாடு!
சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட நீரில் இருந்து பீர் தயாரிக்கப்படுகிறது.
இது மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக சிங்கப்பூரில் கழிவுநீர் கொண்டு பீர் மதுபானம் தயாரிக்கப்படுகிறது.
இதற்காக பெறப்படும் கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டு, அதன்பின் வடிகட்டப்பட்ட சுத்தமான நீராக மாற்றப்படுகிறது. இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீரின் பிராண்ட் நியூவாட்டர் (NEWater) எனப்படுகிறது.
தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து, உள்ளூர் மதுபான நிறுவனமான ப்ரூவர்க்ஸ் இந்த சிறப்பு பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பீர் 'நியூப்ரூ' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த பீர் மிகவும் சுவையாக இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியதால், கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் நீர் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது.
முதலில் கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் அது குடிநீராக மாறுவதற்கு முன்பு பல்வேறு சுத்திகரிப்பு நிலைகளில் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே பயன்பாட்டிற்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இது கழிவு நீரினால் ஆனது என்று என்னால் தீவிரமாகச் கூற முடியவில்லை' என்றும், 'இது குளிர்சாதன பெட்டியில் இருந்தால் அதை நான் பொருட்படுத்த மாட்டேன். அதாவது, இது பீர் போலவே சுவைக்கிறது, எனக்கு பீர் பிடித்திருக்கிறது' என்றும் ஒரு வணிக அங்காடியில் பீர் வாங்கிய நபர் ஒருவர் கூறினார்.
எனினும், சிங்கப்பூரில் கழிவு நீரில் இருந்து பீர் தயாரிக்கப்பட்டதா என்ற சந்தேகமும் ஒரு புறம் உலவுகிறது.