சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடிய தமிழர்கள்!
தொற்றுநோய் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூரில் உள்ள தமிழ்ச் சமூகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 05) அவர்களின் வருடாந்திர இந்து பண்டிகையான தைப்பூசத்தை கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடியது.
தைப்பூசத் திருவிழாவானது தமிழ்க் கடவுளான முருகனுக்கான திருவிழாவாகும். இதில் பக்தர்கள் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்ட காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், முகத்தில், நாக்கில், உடலில் வேல் குத்தியும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிங்கப்பூர் மனிதவளத் துறை அமைச்சர் டான் சீ லெங் தலைமையில் 35,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Photo: Hadi Azmi
"வாழ்க்கை இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது, இது உண்மையில் ஒரு நாடு மற்றும் மக்கள் என்ற வகையில் எங்களுக்கு ஒரு வகையான வெற்றியாகும்" என்று அமைச்சர் கூறினார்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் உரையாடிய அவர், காவடி தாங்குபவர்கள் ஊர்வலத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டதைக் கண்டார்.
மேலும் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலை சுற்றி பால்குடம் ஏந்திச் சென்றார். சுமார் 450 தமிழர்கள் காவடி ஏந்தி இரண்டு பெரிய முருகன் கோயில்களுக்கு இடையே 3.2 கிமீ தூரம் வெறுங்காலுடன் சென்று நெற்றிக்கடனை செலுத்தினர்.
Twitter @xtemujin
இரண்டு கோயில்களும் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு ஆரம்பகாலத்தில் குடிபெயர்ந்த தமிழர்களால் கட்டப்பட்டவை.
பிப்ரவரி 4-ஆம் திகதி சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்கிய விழா ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்தது. இந்த ஊர்வலத்தை இந்து அறநிலைய வாரியம் (HEB) நேரடியாக ஒளிபரப்பியது.
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தைப்பூசம் ஒரு முக்கிய நிகழ்வாகும், இது அங்குள்ள தமிழ் மக்கள் ஒன்றிணைக்கிறது.
Jimmy Wong
Jimmy Wong
Twitter @mitchadventures
Twitter @reviveramesh