மூழ்கும் படகில் புலம்பெயர் சிறுமிக்கு நடந்த கொடூரம்... பயத்தில் உறைந்த தாயார்
மத்தியதரைக் கடலில் புலம்பெயர் படகு ஒன்று மூழ்கிய நிலையில், அதில் பயணித்த சிறுமி ஒருவர் தாயார் கண் முன்னே துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்
புலம்பெயர் நபர் ஒருவராலையே தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. மட்டுமின்றி, அந்த நபரின் இந்த வெறிச்செயலுக்கு இடையே அவரது மகளும் மனைவியும் மூழ்கி இறந்துள்ளதாகவும் இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில் 16 வயதேயான குறித்த சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரத்திற்கு காரணமான நபர் 27 வயதான ஈராக்கியர் என்பது தெரிய வந்தது. மேலும், அந்த சிறுமியின் தாயார் கண்முன்னே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த நிலையில், மூழ்கிய படகில் இருந்து உயிர் தப்பியவர்கள் எண்ணிக்கையில் அந்த நபரும் இருந்ததை அடுத்து, பொலிசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, அந்த சிறுமியும் தாயாரும் ஈராக்கியர்கள் எனவும், ஐரோப்பாவுக்கு படகில் புறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தமது மகளுக்கு நடந்த கொடூரத்தை நேரில் பார்த்து, அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், மூழ்கும் படகில் இருந்து அவர் காப்பாற்றப்படவும், கரைக்கு திரும்பியதும் நடந்த சம்பவத்தை பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்
சுமார் 2 டசின் சிறார்கள் உட்பட அந்த படகில் மொத்தம் 70 பேர்கள் பயணித்துள்ளனர். அதில் 12 பேர்கள் மட்டுமே உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், கடலில் மூழ்கியவர்களில் பாதிக்கும் அதிகமானோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய படகானது இத்தாலிய கடற்கரையில் கரை ஒதுங்க இருந்த நிலையிலேயே மூழ்கியுள்ளது. அதேவேளை அந்த ஈராக்கியர் குறித்த சிறுமியை தாக்கியதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 35 சடலங்களை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது. 15 சிறார்கள் உட்பட 36 பேர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஈராக், சிரியா மற்றும் ஈரான் நாட்டவர்களே தொடர்புடைய படகில் பயணித்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொலை மற்றும் துஸ்பிரயோக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அந்த நபர் கலாப்ரியாவின் தலைநகரான கேடன்சாரோவில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |