பிரித்தானிய மகாராணியாரின் பாதுகாவலர்கள் ஆறு பேர் கைது... செய்த கீழ்த்தரமான செயல்
மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், கீழ்த்தரமான செயல் ஒன்றைச் செய்து கைது செய்யப்பட்டுள்ளார்கள் அவரது பாதுகாவலர்கள் ஆறு பேர்.
மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி அணிவகுப்பில் பங்கேற்க இருந்த அந்த ஆறு பாதுகாவலர்களும், முன்னாள் காவலர்கள் சிலரும் சேர்ந்து, போதைப்பொருட்கள் விநியோகம், அதிக வட்டிக்குக் கடன் கொடுத்தல், பண மோசடி ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.
மிகவும் இரகசியமாக இது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வந்த சிவப்புத் தொப்பி ராஜ இராணுவ பொலிசார், திடீரென சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் நுழைந்து அதிரடியாக ரெய்டுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, மகாராணியாரின் அயர்லாந்துக் காவலர்கள் ஆறு பேரும், முன்னாள் காவலர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
வட அயர்லாந்து, வடக்கு வேல்ஸ், ஹாம்ப்ஷையர் மற்றும் பெர்க்ஷையரில் மேற்கொள்ளப்பட்ட ரெய்டுகளைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் இருவர் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் ஜாமீனில் விடப்பட்டுள்ளார்கள்.
ஆனாலும், அவர்கள் மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி அணிவகுப்பில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.