டெஸ்ட் போட்டியில் அதிரடி காட்டிய இலங்கை வீரர்! மிரட்டலாக அடித்த சதம்
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை A அணி வீரர் லசித் க்ரூஸ்புல்லே அதிரடியாக சதம் அடித்தார்.
இளம் இலங்கை வீரர்
இங்கிலாந்து லயன்ஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. காலேவில் நடந்த இலங்கை A - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் காலேவில் நேற்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை A அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
@OfficialSLC
அதிரடி சதம்
தொடக்க வீரர் லசித் க்ரூஸ்புல்லே ஒருநாள் போட்டியைப் போல் அதிரடியாக விளையாடினார். சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டிய அவர் 130 பந்துகளில் 128 ஓட்டங்கள் விளாசினார்.
@OfficialSLC
இதன்மூலம் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 332 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளையும், சாம் குக் மற்றும் பிஷ்ஷர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.