இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் நியமனம்!
ஜிம்பாப்வே உடனான ஒரு நாள் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஜனவரி 16ம் திகதி Pallekele மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறவிருக்கிறது.
இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் விலகிய நிலையில், எதிர்வரும் ஜிம்பாப்வே உடனான ஒரு நாள் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ருமேஷ் ரத்நாயக்க, கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் உள்ள இலங்கை அணியின் உயர் செயற்திறன் மையத்தில், வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.
இதற்கிடையில், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியின் இடைக்கால பேட்டிங் பயிற்சியாளராக ருவின் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.