இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்
இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் பந்துல வர்ணபுரா (68) காலமான செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பந்துல வர்ணபுரா, கடந்த வாரம் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் கொரோனா நோயால் பாதிக்கப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பந்துல வர்ணபுரா இன்று (அக்டோபர் 18) காலமானார்.
பந்துல வர்ணபுரா மறைவுக்கு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக இருந்த பந்துல வர்ணபுரா, பின்னர் இலங்கை அணியின் பயிற்சியாளராகவும், இலங்கை கிரிக்கெட்டில் நிர்வாகியாகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.