மாதவிடாயின் போது ஊதியத்துடன் கூடிய விடுப்பு அவசியமில்லை: இந்திய பெண் அமைச்சர்
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அவசியமற்றது என இந்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
குளிர்கால கூட்டத்தொடர்
கடந்த 4 -ம் திகதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, மாதவிடாய் சுகாதாரக் கொள்கை தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாகியுள்ளது.
அவர் பேசியது..
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, "மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. அது பெண்களின் வாழ்வில் இயல்பானது. ஒரு சில பெண்களே மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். அது மருந்துகள் மூலம் சரிசெய்யக்கூடியவை தான்.
ஒரு பெண்ணாக நான் இதை சொல்கிறேன். பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது அவசியமற்றது. மாதவிடாய் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் இருப்பதால் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது' என்று பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |