கழிப்பறைக்கு சென்ற நபருக்கு விஷ பாம்பினால் ஏற்பட்ட விபரீதம்! வெளியான பகீர் சம்பவம்
தென்னாப்பிரிக்காவில் கழிப்பறைக்கு சென்ற நபரை பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான ஜங்கிள் சஃபாரியில்லை சுற்றி பார்க்க 47 வயதான ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவர் அங்கிருந்த பொது கழிப்பறையை பயன்படுத்திய போது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதாவது அவர் கழிப்பறைக்கு சென்ற போது கொடிய விஷமுள்ள நாக பாம்பு அவரின் அந்தரங்க உறுப்பை கடித்துள்ளது. பின்னர் 350 கிமீ தொலைவில் உள்ள சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு முதலில் எரிச்சலும், கடுமையான வலியுடன் ஆரம்பித்து படிப்படியாக நெஞ்சு பகுதி வரை விஷம் பரவியது. பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்த போது அவரது உடல் முழுவதும் வீங்கி கரு ஊதா நிறமாக மாறியிருந்தது.
இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து உயிரை காப்பற்றினர். தென்னாப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள் பல விஷ பாம்புகளின் தாயகமாகும். இங்கு பாம்பு கடியால் பலர் உயிரிழந்து இருக்கின்றனர்.
அதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்ட நபர் தாமதமாக மருத்துவமனைக்கு வந்த பிறகும் காப்பாற்றப்பட்டது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.