நள்ளிரவில் வீட்டு கழிவறையில் தானாக தண்ணீர் Flush ஆகும் சத்தத்தை கேட்டு அங்கு வந்த நபர் கண்ட காட்சி! பயத்தில் நடுங்கிய உடல்
ஆஸ்திரியாவில் நள்ளிரவில் வீட்டில் இருந்த கழிவறையில் தண்ணீர் தானாக Flush ஆகும் சத்தத்தை கேட்டு அங்கு சென்ற நபருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அந்த நபர் நள்ளிரவு நன்றாக தூங்கி கொண்டிருந்த வீட்டு கழிவறையில் தண்ணீர் தானாக Flush ஆகும் சத்தம் கேட்டது.
இதையடுத்து அங்கு வந்து பார்த்த போது 6 அடி நீளமுள்ள கொடிய விஷப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த காட்சியை கண்டவுடன் அவரின் கை, கால்கள் நடுங்க தொடங்கியது.
ஒருவழியாக சுதாரித்து கொண்ட அவர் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அந்த பாம்பை பிடித்து சென்று காட்டுக்குள் பத்திரமாக விட்டனர்.
கழிப்பறையில் இருந்த இரண்டு சுவர்களுக்கு இடையில் பாம்பு நுழைந்து வந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.