காலணிக்குள் ’உஷ் ’ என கேட்ட சத்தம்! உள்ளிருந்து படமெடுத்து நின்ற பாம்பு... வீடியோவுடன் எச்சரிக்கை செய்தி
ஷூ ஒன்றுக்குள் இருந்த பாம்பு திடீரென தலையை வெளியில் தூக்கி படமெடுத்த வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி வெளியிட்டு எச்சரிக்கை செய்தியை கூறியுள்ளார்.
சுஷந்தா நந்தா என்ற அதிகாரி வெளியிட்ட வீடியோவில் ஷூ ஒன்றுக்குள் இரும்பு கம்பியை வைத்து வனத்துறை பெண் ஊழியர் துலாவுகிறார். அப்போது அதிர்ச்சி காட்சியாக உள்ளிருந்து பாம்பு ஒன்று படமெடுத்து நிற்கிறது.
பின்னர் லாவகமாக அதை பிடிக்கிறார். சுஷாந்தின் எழுத்து பதிவில், பருவமழையின் போது சாத்தியமில்லாத இடங்களில் பாம்புகள் காணப்படுவதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும், அப்படி சந்தேகம் எதாவது இருந்தால் பயிற்சி பெற்ற பணியாளர்களின் உதவியை உடனே நாடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவானது லட்சக்கணக்கில் பார்வையாளர்களை கடந்து வைரலாகியுள்ளது.
You will find them at oddest possible places in https://t.co/2dzONDgCTj careful. Take help of trained personnel.
— Susanta Nanda IFS (@susantananda3) July 11, 2022
WA fwd. pic.twitter.com/AnV9tCZoKS