வீடுகளில் உள்ள படுக்கையறை, சமையலறையில் சர்வ சாதாரணமாக காணப்படும் விஷப்பாம்புகள்! இப்படியொரு கிராமமா? ஆச்சரிய தகவல்கள்
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது நக்சுன் என்ற கிராமம். உலகில் உள்ள கிராமங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது தான் நக்சுன்!
இதற்கு காரணம் என்ன தெரியுமா?
பொதுவாக கிராமங்களில் ஆங்காகே நாம் பாம்புகளை காணலாம். ஆனால் இந்த நக்சுன் கிராமத்தில் உள்ள வீடுகளில் உள்ள படுக்கையறை, சமையலறை, குளியலறை என வீட்டின் எல்லா இடங்களிலும் பாம்புகள் தொங்கி கொண்டிருப்பதை சர்வசாதாரணமாக காணமுடியும்.
அதிகளவில் இந்த கிராமத்தில் பாம்புகள் இருப்பதால் தான் இதற்கு நக்சுன் என்றே பெயர் வந்ததாம். அதே போல இந்த கிராமத்தின் வயல்வெளிகளிலும், தெருக்களிலும் விஷப்பாம்புகள் இருக்கும். தற்போது, ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால், பாம்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அங்கு வசிக்கும் சவுரவ் என்பவர் கூறுகையில், இங்கு ஆயிரக்கணக்கான விஷ பாம்புகள் உள்ளன. இந்த விஷப் பாம்புகள் வீடுகளுக்குள் வந்து படுக்கையறை, சமையலறை, குளியலறை மற்றும் முற்றத்தில் அமர்ந்துள்ளன.
எங்கள் குடும்பம் ஐந்து முதல் ஆறு தலைமுறைகளாக இந்த இடத்தில் வசித்து வருகிறோம், ஆனால் யாரும் எந்த விதமான துன்பத்தையும் பாம்புகளால் அனுபவித்ததில்லை என கூறி ஆச்சரியப்படுத்துகிறார்.
பையாலால் யாதவ் என்ற 80 வயது மூதாட்டி கூறுகையில், ’நாக் தேவ்தா’ கோவிலில் தான் நாங்கள் வழிபடுவோம். அங்கிருந்து தான் எங்கள் ஊரில் யாருக்காவது மங்களகரமான விடயம் மற்றும் திருமணங்கள் தொடங்கப்படும் என்றார்.
அதே நேரத்தில், விலங்கியல் நிபுணர் ராஜேஷ் சிங் கருத்துப்படி, இந்த கிராமத்தின் புவியியல் இடம் பாம்புகளுக்கு மிகவும் சாதகமானது. மூங்கில் மரங்கள் தவிர, குளம், கால்வாய், வாய்க்கால், பாறைகள் நிறைந்த இப்பகுதி, பாம்புகள் வசிக்கும் இயற்கை இடமாகும்.
ஏனெனில் இந்த இடத்தில் பாம்புகளுக்கு உணவு, பாதுகாப்பு மற்றும் குஞ்சு பொரிக்கும் இடம் எளிதில் கிடைக்கிறது என கூறியுள்ளார்.