இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை! ஐ.நா கூட்டத்தில் பாகிஸ்தானின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த இந்திய பெண்: வைரலாகும் வீடியோ
ஐநா அவையில் நடந்த கூட்டத்தில், இந்தியாவின் ஐஎப்எஸ் பெண் அதிகாரி, ஒருவர் பாகிஸ்தானுக்கு எதிராக பேசிய வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐநாவில் 76-வது பொது கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து உறுப்பு நாடுகளும் கலந்து கொண்ட முக்கியமான கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் இந்தியா சார்பாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியும் இந்தியாவின் ஐநா முதன்மை செயலாளருமான ஸ்னேகா துபே ஐஎப்எஸ் கலந்து கொண்டார்.
அதே போன்று, இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்து கொண்டார். அப்போது இம்ரான்கான், காஷ்மீர் பிரச்சனை குறித்தும், இந்திய அரசின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் பேசினார்.
குறிப்பாக, இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இல்லை. தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகிறது. காஷ்மீர் மக்களை இந்திய அரசு கொடுமைப்படுத்துகிறது.
370-வது சட்ட பிரிவை நீக்கி காஷ்மீரின் சுதந்திரத்தை பறித்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக மாபெரும் அரசு அங்கு ஆட்சியில் உள்ளது என்று அவர் கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், ஸ்னேகா துபே கூறுகையில், பாகிஸ்தான் சர்வதேச தீவிரவாதிகளுக்கு இலவச பாஸ் கொடுக்கும் நாடாகவும், தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் இடமாகவும் திகழ்ந்து வருகிறது.
பாகிஸ்தான் ஏதோ, தங்களை நல்ல நாடு போல காட்டிக்கொண்டு தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் தங்கள் நாட்டில் தீவிரவாதத்திற்கு பயிற்சி அளிப்பதால்தான் உலக நாடுகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன.
காஷ்மீர் குறித்து சர்வதேச மேடையில் பேச பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. ஜம்மு காஷ்மீர் எப்போதும், எந்த காலத்திலும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து இருக்கும் காஷ்மீர் பகுதிகளும் கூட எங்களுக்குத்தான் சொந்தம் என்பதை பாகிஸ்தான் மறக்க வேண்டாம்.
அந்த பகுதிகளை பாகிஸ்தான் உடனே காலி செய்ய வேண்டும். பாகிஸ்தான் முதலில் தங்கள் நாட்டில் இருக்கும் மத சிறுபான்மையினரை காக்க வேண்டும். வங்கதேச மக்களுக்கு பாகிஸ்தான் செய்த கொடுமைகளை யாராலும் மறக்க முடியாது, அதுமட்டுமின்றி அமெரிக்காவில் 9/11 தாக்குதலை நடத்திய பின் லேடன் பிடிபட்டது பாகிஸ்தானில் தான், பின்லேடனுகு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்துள்ளது.
இப்போதும் கூட பாகிஸ்தான் அரசு அவரை ஒரு தியாகி, போராளி என்று அழைக்கிறது. அமெரிக்காவில் அவ்வளவு பெரிய தாக்குதல் நடத்தியவரை பாகிஸ்தான் தியாகி என்கிறது. இப்படிப்பட்ட பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பேசலாமா? சர்வதேச மேடை ஒன்றை பாகிஸ்தான் எப்போதும் தவறாக பயன்படுத்தி வருகிறது.
Sneha dube , #India's first secretary at the #UnitedNations called out #Pakistan in a blistering retort for shielding and supporting #terror.#sneha_dubey #India
— Ravindra Mehra (@_ravindra_mehra) September 26, 2021
Vid:@LogicalIndians pic.twitter.com/eBVlQ89YWb
இந்தியாவிற்கு எதிரான பொய்யான பிரச்சாரத்தை பரப்ப, தன் நாட்டின் மீது இருக்கும் தீவிரவாத அழுக்குகளை மறைக்க பாகிஸ்தான் ஐநா மேடையை தவறாக பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
இவரின் இந்த பேச்சைக் கட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி, இவரின் வீடியோ அமெரிக்காவிலும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.ஆப்கானிஸ்தானில் தாலிபான் வெற்றி காரணமாக பாகிஸ்தான் மீது கோபத்தில் உள்ள பல நாடுகள் இவரின் பேச்சை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.