பாகற்காய் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா? அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
கசப்பு நிறைந்த உணவு பொருள்கள் உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கின்றன. அதில் ஒன்று பாகற்காய்.
பலரும் இதனை ஒதுக்குவதுண்டு. உண்மையில் இது உடலுக்கு பலவகையில் நன்மை தருகின்றது. அதிலும் இதில் டீ போட்டு குடிப்பது இன்னும் நன்மையே தருகின்றது.
அந்தவகையில் பாகற்காய் டீ குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
எப்படி தயாரிப்பது?
பாகற்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமான தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
கொதிக்கும் பொது பாகற்காயின் சாறு தண்ணீரில் இறங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த சாறினை வடிகட்டி எடுத்தால் உடலுக்கு நன்மை தரும் பாகற்க்காய் டீ தயார்.
இந்த பாகற்காய் டீயில் கசப்பு தெரியாமல் இருக்க சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். அப்படியே குடிக்க வேண்டும். இந்த டீயை தொடர்ந்து வாரம் ஒரு முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நன்மைகள்
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் நீங்கி விடும். சர்க்கரையின் அளவு சீராகும்.
- இந்த டீ எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத ஒரு இயற்கை பானமாகும். அதிக நேரம் எடுக்காமல் உடனடியாக தயாரிக்கக் கூடிய ஒரு டீயாகும்.
- கசப்புத் தன்மையை பற்றி நினைக்காமல் தொடர்ந்து இதனை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தாக்கத்தில் இருந்து தப்பித்து விடலாம்.
குறிப்ப - சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சேர்த்து கொள்ள கூடாது