பூமியை இன்று தாக்க உள்ள சூரிய புயல் - இந்தியாவில் அரோராவை காண வாய்ப்பு
இன்று சூரிய புயல் பூமியை தாக்க உள்ளதால், இந்தியாவில் அரோராவை காண வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூமியை தாக்க உள்ள சூரிய புயல்?
கடந்த ஜூன் 6 ஆம் திகதி சூரியனின் ஆக்டிவ் ரீஜியன் 4461' (Active Region 4461) என்ற பகுதியில், 'M 1.8' ரகத்தை சேர்ந்த ஒரு சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு (Solar Fare) நிகழ்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த வெடிப்பின் காரணமாக, ஒரு பில்லியன் டன் எடையுள்ள காந்தமயமாக்கப்பட்ட பிளாஸ்மா மேகத்தையும் வினாடிக்கு 1,400 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் விண்வெளியில் செலுத்தியது. அந்த மேகம் தற்போது பூமியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் பூமிக்கு ஜி3 என்ற வலுவான புவிகாந்தப் புயல் எச்சரிக்கையை சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்கும் அமெரிக்க அமைப்பான விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் (SWPC) விடுத்துள்ளது.
புயலின் தாக்கம் அதன் காந்தப்புலத்தின் திசையை பெருமளவில் சார்ந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஒருவேளை சூரிய புயலின் காந்தப் புலம் தெற்கு நோக்கி அமைந்தால் அது பூமியை பாதுகாக்கும் காந்த மண்டலத்தை (Magnetosphere) தற்காலிகமாக பலவீனப்படுத்தும்.
Just when everyone thinks the recent set of solar storm fizzles were all we were going to have this week, WHAM! Region 4461 fires a massive blast and launches a fast moving solar storm towards Earth. Looking closely at the region just before the eruption, a very dense core… pic.twitter.com/DQjOWZANVG
— Dr. Tamitha Skov (@TamithaSkov) June 7, 2026
இதனால், சூரியனின் மின்னூட்ட பெற்ற துகள் பூமியின் வளிமண்டலத்திற்குள் ஆழமாக ஊடுருவக்கூடும்.
இந்தியாவில் அரோரா?
மின்னூட்டம் பெற்ற இந்த சூரியத் துகள்கள் வளிமண்டலத்தின் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவும் போது, இரவு வானில் Northern and Southern Lights எனப்படும் 'அரோரா' வண்ண ஒளிகளை உருவாக்கும்.
Northern lights. pic.twitter.com/pnFq7eXpq6
— Aesthetics (@aestheticspost_) April 9, 2026
வழக்கமாக துருவ பகுதிகளில் மட்டுமே வானில் தெரியும் வண்ணமயமான அரோரா, இந்த முறை காந்த புயலின் தீவிரம் காரணமாக வட இந்தியாவின் சில பகுதிகள், மத்திய ஐரோப்பா, வட அமெரிக்கா, மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய பகுதிகளிலும் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை இரவு வானம் ஒளிருமா அல்லது இருட்டாகவே இருக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரே காரணியான Bz திசையானது, பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்காணிப்பு செயற்கைக்கோள்களை அந்த மேகம் கடக்கும்போது மட்டுமே அளவிடப்படும்.
15 முதல் 60 நிமிடங்களுக்கு முன்புதான் இந்த ஒளியின் முழுமையான தீவிரம் நமக்குத் தெரியவரும்.
மக்களுக்கு பாதிப்பா?
முன்னதாக Active Region 4455 எனப்படும் சூரியனின் மற்றொரு பகுதியில் இருந்து உருவான சில சிறிய மறறும் வேகம் குறைந்த சூரியப் புயல்கள் இன்னும் விண்வெளியில் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
புதிதாக ஏவப்பட்ட, வேகமான சூரியப் பெருவெடிப்பானது, மெதுவாக நகரும் இந்த மேகங்களை முந்திச் சென்று தன்னுள் ஈர்த்துக்கொண்டால், அது பூமியை வந்தடைவதற்கு முன்பே இன்னும் அதிக சக்தி வாய்ந்ததாக மாறக்கூடும்.
இந்தப் புயலால் பூமியில் உள்ள மக்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், வலுவான புவிகாந்தக் கோளாறுகள் அவ்வப்போது செயற்கைக்கோள் செயல்பாடுகள், ஜிபிஎஸ் வழிசெலுத்தல், வானொலித் தொடர்புகள் மற்றும் மின் அமைப்புகளைப் பாதிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |