கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் குண்டுவெடிப்பு: 5 வீரர்கள் பலி
சோமாலியா நாட்டில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
சோமாலியா நாட்டில் கிளப் அணிகளுக்காக விளையாடும் கால்பந்து வீரர்கள் நேற்று ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் Kismayo நகரில் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென அந்த பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் கால்பந்து வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். 12 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் Mohamed Abdullahi Mohamed, குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அல் கொய்தாவுடன் தொடர்பில் இருக்கும் அல் ஷாபாப் அமைப்பே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.