டோக்கியோ ஒலிம்பிக்ஸ்! மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை தோல்வி... ஆனாலும் அவருக்கு இருக்கும் ஒரு வாய்ப்பு
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வியடைந்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த 23ம் திகதி தொடங்கி நடந்து வருகிறது.
இதில் 12வது நாளான இன்று மகளிர் மல்யுத்த போட்டியில் (62 கிலோ எடை பிரிவு) இந்தியாவின் சோனம் மாலிக் மற்றும் மங்கோலியா நாட்டின் போலர்துயா குரெல்கூ ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில் சோனம் தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும் அவருக்கு இன்னும் ஒரு அதிர்ஷ்டம் உள்ளது.
ஏனெனில் சோனம் மாலிக்குக்கு போட்டியில் தொடர்ந்து விளையாட மற்றொரு வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.