நடுவானில் நடந்த திகில் சம்பவம்! விமானத்தை சூழ்ந்த பறவை கூட்டம்.. பின்னர் நடந்தது என்ன?
தென் ஆப்பிரிக்காவில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது பறவை கூட்டம் தாக்கியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுமார் 26 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த Jetstream 41 என்கின்ற விமானம் மீது பறவைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. பறவைகளின் தாக்குதலை எதிர்கொண்டதால் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.
ஆனால் விபத்தின் போது யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பறவைகள் மோதியதில் விமானத்தின் ப்ரொபெல்லர் உடைந்து பறவைகள் விமானத்திற்குள் நுழைந்தது. அப்போது விமானத்தின் உள்ள இருக்கைகளை கிழித்து நாசமாக்கியுள்ளது.
MT-Propeller என்று அழைக்கப்படும் இது ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஏர்லிங்க் நிறுவனம் கூறியதாவது, தென்னாப்பிரிக்காவின் Venice விமான நிலையத்தில் Jetstream 41 விமானம் தரையிறங்கும் போது பெரிய பறவை ஒன்றின் மீது மோதியது.
Remind me never to sit by a prop again! Thankfully no one hurt on this J41. #j41 #birdstrike #fanhitstheshit #birdmighthavebeeninjured It sure as hell would have woken you up if you were napping onboard. pic.twitter.com/jvUTYkKces
— Pontius Pilate (@pontius_is_goat) January 4, 2022
விமானம் கடுமையாக சேதமடைந்திருந்த போதும் பயணிகளுக்கோ, விமானிகளுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.