உலகை அச்சுறுத்தும் 'ஒமிக்ரான்' வைரஸ்! தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய எச்சரிக்கை
ஒமிக்ரான் வைரஸ் நோய் எதிர்ப்பு சக்திகளை குறைப்பதாக தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சீனாவில் பரவிய கொரோனாவை அடுத்து தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை ஒமிக்ரான் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து இருக்கிறது.
இது வரை சுமார் 23 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் டெல்டா வகையை விட இந்த புதிய வகை கொரோனா வைரஸில் ஆபத்து அதிகம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வைரஸ் தோன்றிய தென் ஆப்பிரிக்காவில் வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதில் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஒமிக்ரான் வைரஸ் சில நோய் எதிர்ப்பு சக்திகளை தகர்க்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே வேளையில் தடுப்பூசிகள் கடுமையான நோய் தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும், விஞ்ஞானிகள் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பில் லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆனால் அந்த வைரஸ் லேசான அறிகுறியை ஏற்படுத்தும் என்று இப்போதே சொல்ல முடியாது.
இந்த பாதிப்புகள் பெரும்பாலும் இளம் வயதினரிடையே பரவி இருப்பதால் அறிகுறிகள் லேசானவையாக இருந்தது. ஆனால் தற்போது வயதானவர்ககளை குறிவைத்து ஒமிக்ரான் தாக்கி வருகின்றது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள 5 மாகாணங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிப்பு தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து இருக்கிறது. ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்கா நாடு முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.