இந்தியாவில் நேரலையின்போது தென் கொரிய பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட இளைஞர்கள்!
இந்திய நகரம் மும்பையில் தென் கொரிய பெண்ணொருவரிடம் அத்துமீறிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
தென் கொரிய யூடியூபர்
தென் கொரியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் மியோச்சி என்ற இளம்பெண் மும்பையில் உள்ள சாலையில் யூடியூப் நேரலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பதாக கூறி அப்பெண்ணை கட்டாயப்படுத்தினர். அவர் வேண்டாம் என்று கூறியபோதும் கையைப் பிடித்து இழுத்தனர்.
இன்னொரு இளைஞர் அத்துமீறி முத்தமிட முயன்றார். பின்னர் அவர்களிடம் இருந்து விலகி சென்ற மியோச்சியை பின்தொடர்ந்து வந்த குறித்த இளைஞர்கள் வாகனத்தில் ஏறும்படி மறுபடியும் வற்புறுத்தியுள்ளனர்.
Last night on stream, there was a guy who harassed me. I tried my best not to escalate the situation and leave because he was with his friend. And some people said that it was initiated by me being too friendly and engaging the conversation. Makes me think again about streaming. https://t.co/QQvXbOVp9F
— Mhyochi in ?? (@mhyochi) November 30, 2022
வைரலான வீடியோ
இந்த சம்பவத்தின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அப்பெண், மீண்டும் நேரலை செய்ய வேண்டுமா என இந்த நிகழ்வு தன்னை யோசிக்க வைத்து விட்டதாக குறிப்பிட்டார்.
அவரது பதிவு வைரலானதைத் தொடர்ந்து பொலிஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குறித்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவரின் பெயர் மொபின் சந்த் முகமது ஷேக் (19), மற்றொருவர் முகமது நகிப் சதாரைலம் அன்சாரி (20) என தெரிய வந்துள்ளது.
Mumbai | Two youths - Mobeen Chand Mohammad Shaikh and Mohammad Naqeeb Sadrealam Ansari - arrested for allegedly molesting a Korean woman YouTuber during a live streaming. FIR registered by Khar Police pic.twitter.com/YdT1HRQc3p
— ANI (@ANI) December 1, 2022
இந்த சம்பவம் தன்னை பாதித்திருந்தாலும் இந்தியாவை விரும்புவதாக மியோச்சி தெரிவித்துள்ளார்.
@mhyochi