ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்ட பொலிசார்... நெருங்க விடாமல் பாதுகாப்பு அரண் அமைத்த ராணுவம்

South Korea
By Arbin Jan 03, 2025 04:56 AM GMT
Report

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்யும் பொருட்டு கலவரத் தடுப்பு பொலிசார் ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த

இதில் அதிர்ச்சி திருப்பமாக ஜனாதிபதிக்கு ஆதரவாக பொலிசாருக்கு எதிராக இராணுவம் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூன் சுக் யோல் கடந்த மாதம் இராணுவச் சட்டத்தை அறிவித்து தென் கொரியாவை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த நிலையில், நாட்டின் பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்ட பொலிசார்... நெருங்க விடாமல் பாதுகாப்பு அரண் அமைத்த ராணுவம் | South Korean President Arrest Riot Police

அத்துடன் அவர் மீது குற்றவியல் விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வந்த அவர் மீது நீதிமன்றம் கைதாணை வெளியிட்டது.

இந்த நிலையில் கலவரத் தடுப்பு பொலிசார் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை அதிகாரிகள் குழு கைதாணையை செயல்படுத்தும் விதமாக அவரது சியோல் இல்லத்திற்குள் நுழைந்துள்ளனர்.

இப்படியான சம்பவத்தை எதிர்பார்த்திருந்த யூன் சுக் யோல், இராணுவத்தை பயன்படுத்தி, தமக்கு பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 3,000 பொலிசார் மற்றும் அதிகாரிகள் தற்போது யூன் சுக் யோல் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்ட பொலிசார்... நெருங்க விடாமல் பாதுகாப்பு அரண் அமைத்த ராணுவம் | South Korean President Arrest Riot Police

ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி கைது செய்யப்படுவது தென் கொரிய அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்று. தம்மீதான கைதாணை என்பது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ள யூன், சட்டத்தின் அடிப்படையில் அதை எதிர்கொள்ள தாம் தயார் என்றும் கொந்தளித்துள்ளார்.

பகல் 7 மணி முதல் ஜனாதிபதியை கைது செய்யும் பொருட்டு அதிகாரிகள் அவரது குடியிருப்பு வளாகத்தில் நுழைந்துள்ளனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் அளித்த அழுத்தம்

டிசம்பர் 3ம் திகதி நடந்த அதிகார அபகரிப்பு குறித்து தென் கொரிய நாடாளுமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின் கதவுகளை உடைக்கவும், தேவை எனில் துப்பாக்கிச் சூடு நடத்தவும் தமது இராணுவ தளபதிக்கு அன்றைய நாள் அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

தென் கொரிய மக்களை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த இராணுவச் சட்டம் என்பது வெறும் 6 மணி நேரம் மட்டுமே அமுலில் இருந்தது. அதற்குள் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மக்கள் அளித்த அழுத்தம் காரணமாக இராணுவச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்ட பொலிசார்... நெருங்க விடாமல் பாதுகாப்பு அரண் அமைத்த ராணுவம் | South Korean President Arrest Riot Police

ஆனால் துணிச்சலான எம்.பி.க்கள் மற்றும் பணியாளர்கள் ஒன்று திரண்டு, நாடளுமன்றத்தை இராணுவம் கைப்பற்றாமல் இருக்க போராடினர். அடுத்த சில மணி நேரத்தில் 190 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி யூனின் இராணுவச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்து நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் டிசம்பர் 14 அன்று ஒரு பெரும் வாக்கெடுப்பில் பதவி நீக்கம் செய்யப்பட்டார், அதில் அவரது சொந்த கட்சி உறுப்பினர்களும் அதற்கு வாக்களித்தனர். பிரதமர் ஹான் டக்-சூ டிசம்பர் 14 அன்று நாட்டின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் - ஆனால் அவர் டிசம்பர் 27 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US