உலக நாடுகளே...எங்களை தண்டித்துவிடாதீர்கள்! Omicron வைரஸ் குறித்து தென் ஆப்பிரிக்கா கவலை
ஒமைக்ரான் வைரஸ் குறித்து கூறியதற்கு எங்களை பாராட்ட வேண்டும், தண்டித்துவிடாதீர்கள் என்று தென் ஆப்பிரிக்கா உலக நாடுகளுக்கு தன்னுடைய கவலையை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24-ஆம் திகதி புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. .1.1.529 என்றழைக்கப்படும் சுமார் 50 உருமாற்றம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் அது என்று தெரிவிக்கப்பட்டது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்களில் இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும்,, தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த வைரஸ் பரவல் காரணமாக, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயண தடையை விதித்துள்ளன. இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால் தங்கள் நாட்டை பற்றி தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாக தென் ஆப்ரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒமைக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவுடன் சமீபத்திய தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்குப் பிறகு இஸ்ரேலும், பெல்ஜியமும் இந்த வைரஸை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளன. அந்த நாடுகளுக்கான எதிர்வினை தென்னாப்பிரிக்காவில் உள்ள வைரஸ் என மையப்படுத்தி கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவின் சோதனை திறன் மற்றும் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகளை போலவே நாங்களும் சிறந்த முறையில் முன்னுதாரணமாக இருந்தோம்.
அதிகஅளவு தடுப்பூசி செலுத்தி வருகிறோம். எங்கள் நாட்டில் இதுபோன்ற புதிய வைரஸ் இருப்பதையும் அறிவித்தோம். எங்கள் இந்த நடவடிக்கையை பாராட்ட வேண்டும், தண்டிக்கக்கூடாது.
உலகின் பிற பகுதிகளில் புதிய மாறுபாடு கொண்ட கரோன வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையாரும் மறுந்து விடக்கூடாது. அந்த வைரஸ் ஒவ்வொன்றும் தென்னாப்பிரிக்காவுடன் சமீபத்திய தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. இதையும் உலக சமூகம் மனதில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022