இலங்கை - தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் போட்டி தொடங்கியது! முதல் போட்டியில் வென்ற உற்சாகத்தில் களமிறங்கும் இலங்கை வீரர்கள்
இலங்கை - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியுள்ளது.
இரு அணிகள் பங்கேற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 300 ரன்கள் குவித்த நிலையில் 14 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.
இதையடுத்து இன்று 2வது ஒருநாள் போட்டி பிரேமதாசா மைதானத்தில் தொடங்கவிருந்தது.
ஆனால் தொடர் மழை காரணமாக போட்டியானது 90 நிமிடங்கள் தாமதமாக சற்றுமுன்னர் தொடங்கியது. இதனால் 47 ஓவர்கள் போட்டியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் இலங்கை அணியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.
அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க தலைவர் Temba Bavuma காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை.
அவருக்கு பதிலாக முதல் முறையாக இடது கை சுழற்பந்துவீச்சாளர் Keshav Maharaj தென்னாப்பிரிக்க அணியை இன்றைய போட்டியில் வழிநடத்துகிறார்.