வட கொரியாவை தொடர்ந்து பயங்கர ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்த பிரபல நாடு!
தென் கொரியா செப்டம்பர் 15 அன்று நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்ததை ஜனாதிபதி Moon Jae-in அலுவலகம் உறுதி செய்தது.
இந்த தொழில்நுட்பத்தைப் பெற்ற உலகின் ஏழாவது நாடாக தென் கொரிய உருவெடுத்துள்ளது.
நீர்மூழ்கிக் கப்பலான அஹ்ன் சாங்-ஹோவில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஏவுகணை அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாகவும், ஜனாதிபதி Moon Jae-in இந்த சோதனையை கவனித்தார் என தென் கொரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் (ஜேசிஎஸ்) வெளியிட்ட அறிக்கையில், வட கொரியா ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாகக் கூறியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சியோல் மற்றும் டோக்கியோ ஆகிய இரண்டும் தங்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சில்களை அவசரமாக கூட்டப்போவதாக அறிவித்தன.