பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறை

Crime England
By Arbin Jan 23, 2025 06:57 PM GMT
Report

பிரித்தானியாவில் Southport பகுதியில் மூன்று சிறுமிகளைக் கொன்ற இளைஞருக்கு குறைந்தது 52 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துயரமான தருணங்களில் ஒன்று

குறித்த கோர சம்பவத்தை பிரித்தானியாவின் வரலாற்றில் மிகவும் துயரமான தருணங்களில் ஒன்று என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறை | Southport Murders Teenager Jailed 52 Years

வெறும் 17 வயதான Axel Rudakubana தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் வாய்விட்டு அலறியதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் Southport பகுதியில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் கலவரம் வெடித்தது.

தாக்குதலில் ஈடுபட்டவர் புபல்பெயர் அகதி என வெளியான பொய்யான தகவலை அடுத்தே கலவரம் வெடித்தது. ஆனால் Axel Rudakubana பிரித்தானியர் என்பது வெளிச்சத்துக்கு வந்ததன் பின்னர் சூழ்நிலை கட்டுக்குள் வந்தது.

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறை | Southport Murders Teenager Jailed 52 Years

குற்றவாளியான Rudakubana வன்முறை மற்றும் இனப்படுகொலையில் வெறி கொண்டவர் என்று அரசு தரப்பு சட்டத்தரணி டீனா ஹீர் லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த நபரால் பாதிக்கப்பட்ட இருவர் மிகவும் பயங்கரமான காயங்களுக்கு ஆளானார்கள் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜூலியன் கூஸ் தெரிவிக்கையில்,

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறை | Southport Murders Teenager Jailed 52 Years

Rudakubana குறைந்தபட்சம் 52 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடந்தபோது அவருக்கு 17 வயது என்பதால் முழு ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்றும், ஆனால் அவர் ஒருபோதும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். 

மகிழ்ச்சியைத் தருகிறது

மேலும், வியாழக்கிழமை விசாரணையின் போது இரண்டு முறை, Rudakubana உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூச்சலிட்ட பின்னர் அவையிலிருந்து அகற்றப்பட்டார். தனக்கு எதிரான தீர்ப்பை கேட்க நீதிமன்றத்திற்குத் திரும்ப அவர் மறுத்துவிட்டார்.

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறை | Southport Murders Teenager Jailed 52 Years

சம்பவத்தின் பதிவான காணொளி ஒன்றை நீதிமன்றத்தில் திரையிட்டுள்ளனர். அந்த நடன நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ள யோகா ஆசிரியர் Leanne Lucas தெரிவிக்கையில், நாங்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பதாலையே அவர் எங்களை குறிவைத்தார் என்றும், ஐந்து முறை கத்தியால் தாம் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மொத்த 26 சிறார்கள் கலந்துகொண்ட அந்த விடுமுறை நிகழ்வில் Bebe King(6), Elsie Dot Stancombe(7), மற்றும் Alice Dasilva Aguiar(9) ஆகிய மூவர் கொல்லப்பட்டனர். இருவர் 85 முதல் 122 காயங்களுடன் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறை | Southport Murders Teenager Jailed 52 Years

ஒருவரின் தலையை துண்டிக்கும் முயற்சியும் நடந்துள்ளதாக அர்சு தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கைதான பின்னர் பொலிசாரிடம் பதிலளித்த Rudakubana, அந்தக் குழந்தைகள் இறந்துவிட்டதில் எனக்கு மகிழ்ச்சி, அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என குறிப்பிட்டுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US