நாவூறும் சுவையில் சோயா கோலா உருண்டை.., எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த சோயா கோலா உருண்டை மிகவும் பிடிக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் சோயா கோலா உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சோயா- 1 கப் சோம்பு- 1 ஸ்பூன்
- பச்சைமிளகாய்- 2
- வெங்காயம்- 1
- புதினா- 1 கைப்பிடி
- கொத்தமல்லி- சிறிதளவு
- பொட்டுக்கடலை- 2 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் சோயாக்களை வெந்நீர் ஊற்றி 15 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு, அரிசி மாவு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் ஊறவைத்த சோயாக்களை பிழிந்து சேர்த்து நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து சிறிய சிறிய உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
இறுதியாக வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை பொறித்து எடுத்தால் சுவையான சோயா கோலா உருண்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |