போதையில் பெற்ற தாயை.., 16 வயது மகன் கைது!
ஸ்பெயினில் 16 வயது சிறுவன் போதை மயக்கத்தில் பெற்ற தாயையே துஷ்பிரயோகம் செய்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
ஸ்பெயினின் கிரான் கனேரியா தீவில் உள்ள லாஸ் பால்மாஸில் செவ்வாய்கிழமை நடந்த இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று இந்த வழக்கு முதற்கட்ட நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில், 16 வயது மைனர் சிறுவன் தனது சொந்த தாயை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தனது மகனின் கேவலமான செயல் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சிறுவனை கைது செய்தனர்.
ஒரு சிறார் நீதிமன்றத்தில் நீதிபதி மெர்சிடிஸ் மார்டினெஸ் சான்செஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் தான் போதை தலைக்கேறிய நிலையில் இருந்ததாக கூறினார். தனது தாயின் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து எதுவும் தெரியாது என்றும் தனக்கு எதுவும் நனவில் இல்லை என்றும் கூறினார்.
வழக்கறிஞர் ஜோஸ் அன்டோனியோ பிளாங்கோ, சிறுவனை டெனெர்ஃப்பில் உள்ள சிறைச்சாலைக்கு அனுப்புமாறு கேட்டார். அதன்படி, கோவிட் -19 நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டவுடன் சிறுவனை அங்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சிறுவன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மைதானா என்பதை அறிய மருத்துவ பரிசோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் என்பதால் அவரது அடையாளத்தை காவல்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்டவர் ஸ்பெயினின் குடிமகனா அல்லது அவர் வேறு ஏதேனும் நாட்டிலிருந்து வந்து இங்கு குடியேறியாரா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
காவல்துறை அதிகாரிகள் சிறுவனை விசாரித்தபோது, தன்னால் நடந்த எதையும் நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை என கதறியுள்ளான். அதனால் அவன் தற்கொலை கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.