பிரித்தானியர்களுக்கு தடை விதித்த பிரபல ஐரோப்பிய நாடு! வெளியான முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஸ்பெயின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸான Omicron, இப்போது உலகின் சில நாடுகளில் கொஞ்சம், கொஞ்சமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் பயணக்கட்டுபாடுகளை விதித்துள்ளது.
அந்த வகையில், ஸ்பெயின் அரசு பிரித்தானியாவில் இருந்து வரும் மக்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்,அப்படி இல்லையென்றால் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை வரும் புதன் கிழமை முதல் அமுலுக்கு வரும் எனவும், முதல் தடுப்பூசியாவது நிச்சயம் போட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக பிரபல சுற்றுலாததளமான ஸ்பெயினுக்கு ஏராளமான பிரித்தானியர்கள் ஸ்பெயினுக்கு வருவார்கள் என்பதால், இந்த கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இது பிரித்தானியா குடியிருப்பாளர்களை பாதிக்கும், ஆனால் அதே சமயம் ஸ்பெயினில் வசிக்கும் பிரித்தானியர்களை இது பாதிக்காது, இந்த புதிய நடவடிக்கை வரும் டிசம்பர் 1-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.