2 மகள்களை கொன்று கடலில் வீசிய கொடூர தந்தை! நீதிமன்றத்தில் கொடுத்த அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்!
ஸ்பெயினில் தனது இரண்டு குழந்தைகளை கொன்று கடலில் வீசிய தந்தை, நீதிமன்ற விசாரணையில் கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tomas Gimeno கடந்த ஏப்ரல் 27-ஆம் திகதி தனது முன்னாள் மனைவி Beatriz Zimmerman உடன் சண்டையிட்டு, தனது மகள்களான Olivia Gimeno (6) மற்றும் Anna Gimeno (1) இருவரையும் கடத்திச் சென்றார்.
Beatriz மீது கடும் கோபத்தில் இருந்த அவர், இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து, விளையாட்டு பொருட்களை எடுத்துச் செல்லும் பைகளில் அடைத்து, Tenerife தீவிற்கு அருகே உள்ள கடலில் வீசியுள்ளார்.
கடந்த வாரம் டோமஸ் Tenerife தீவில் இருப்பதை அறிந்த பொலிஸார், குழந்தைகளை தேடியபோது, கடலுக்குள் சுமார் 3000 அடியில் 2 விளையாட்டு பைகளை கண்டுபிடித்தனர்.
அவற்றில் ஒரு பையில் 6 வயது குழந்தையான ஒலிவியாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மற்றொரு பை காலியாக இருந்த நிலையில், 1 வயது குழந்தை Anna-வில் உடலை மீட்பு படையினர் தேடிவருகின்றனர்.
அதன்பிறகு, டோமஸை கைது செய்ய சர்வதேச பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டு, தற்போது அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், முதற்கட்ட நீதிமன்ற விசாரணையின்போது, கொலைகளைச் செய்தது ஏன் என்று வாக்குமூலம் கொடுத்த டோமஸ், "எனது முன்னாள் மனைவிக்கு தன் வாழ்க்கையில் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு பெரிய வலியைக் கொடுக்க நினைத்தேன்" என கூறியுள்ளார்.
தாயிடமிருந்து பிரித்து கொண்டுவரப்பட்ட மகள்களை, தனது வீட்டில் அடைத்து வைத்திருந்த டோமஸ், முதலில் தூக்கமாத்திரையை கொடுத்து இருவரையும் மயக்கமடைய வைத்துள்ளார். பிறகு, இருவரையும் கொலை செய்துள்ளார். அதன்பிறகு, வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியதாக, அவர் விசாரணையில் கூறியுள்ளார்.
பெற்ற தந்தையே தனது 2 குழந்தைகளை கொடூரமாககே கொன்று கடலில் வீசிய இச்சம்பவம், ஒட்டுமொத்த ஸ்பெயினையும் கதிகலங்க வைத்துள்ளது.