சியூட்டா விவகாரம்: இத்தாலிக்கு கெடு விதித்த ஸ்பெயின்: பதிலடி நடவடிக்கை உறுதி
சியூட்டா தொடர்பான விவகாரத்தில் இத்தாலிக்கு ஸ்பெயின் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
சியூட்டா விவகாரம்
கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமான சியூட்டாவிற்குள் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அத்துமீறி நுழைந்தனர்.
இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஸ்பெயினில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை சோதனைகளை அமல்படுத்தி இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உத்தரவிட்டு இருந்தது.
இந்த விவகாரம் ஸ்பெயின் மற்றும் இத்தாலி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஸ்பெயினில் இருந்து வரும் மக்களை சோதனைக்கு உட்படுத்தப்படும் என்ற இத்தாலியின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று ஸ்பெயின் நேரடியாக குற்றஞ்சாட்டியது.
அத்துடன் இந்த நடவடிக்கை தேவையற்றது, மற்றும் ஐரோப்பிய யூனியனின் நலனுக்கு எதிரானது மற்றும் ஸ்பெயின் மக்களுக்கு எதிரானது என்று ஸ்பெயின் அரசு கண்டித்தது.
இத்தாலிக்கு கெடு விதித்த ஸ்பெயின்
இந்நிலையில் இத்தாலி தன்னுடைய புதிய எல்லை கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்காவிட்டால், இத்தாலிய பயணிகளுக்கு எதிராக அதே போன்ற சோதனை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் விதிக்கும் என்று அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.

அத்துடன் ஆகஸ்ட் 9ம் திகதிக்குள் இத்தாலிய அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் ஸ்பெயின் கெடு விதித்துள்ளது.
இத்தாலி அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஸ்பெயின் நாட்டு மக்களின் நலன்களையும், கவுரவத்தையும் பாதுகாக்க அதற்கான தக்க நடவடிக்கையை ஸ்பெயின் அரசு முன்னெடுக்கும் என்று ஸ்பெயின் அரசு தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |