மனசு சரியில்லையா? இங்கே வாங்க.. அழுவதற்கு தனி அறையை உருவாக்கிய பிரபல நாடு! சுவாரஸ்சிய தகவல்
ஸ்பெயினில் உருவாக்கப்பட்ட அழுகை அறைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மக்களுக்கு முதல் எதிரியாக இருப்பது மன அழுத்தம். இதனால் பலரின் வாழ்க்கையில் சந்தோஷம் என்பது இல்லாமலே போய் விட்டது. இதனை சரி செய்ய உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள மார்ட்டி பகுதியில் மக்கள் அழுவதற்கு ஒரு தனி அறையை உருவாக்கியுள்ளனர். அந்த அறையில் அழுக எனக்கும் கவலை இருக்கிறது போன்ற வாக்கியங்கள் எழுதப்பட்டுள்ளது.
இந்த அறையின் சிறப்பு என்னவென்றால் மனதில் கவலையுடன் உள்ள மக்கள் இங்கே வருகை வந்து யாரிடம் பேச நினைக்கிறார்களோ அவர்களை தொடர்பு கொண்டு மனதில் உள்ள பாரத்தை கொட்டி தீர்க்கலாம்.
தங்களின் கஷ்டத்தை கேட்க யாரும் இல்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த அறை ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அழுகை அறைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.