ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை என்றால்..ஸ்பெயின் சொந்த முடிவில் செய்யும் - பிரதமர் சான்செஸ் அதிரடி
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தருணம் வந்துவிட்டது என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
பெட்ரோ சான்செஸ் ஆதரவு
ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமரான பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) பெல்ஜிய பிரதமர் அலெக்ஸாண்டர் டி குரூ (Alexander De Croo) உடன் பாலஸ்தீனம், எகிப்து ஆகிய நாடுகளுக்கு தனது சுற்றுப்பயணத்தில் இணைந்தார்.
AFP
இரு நாடுகளின் தலைவர்களும் காஸாவில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.
இஸ்ரேல் மீது சாடல்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சான்செஸ், 'இஸ்ரேல் சர்வதேச சட்டத்தைப் பின்பற்றவில்லை, காஸாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகளை கண்மூடித்தனமாக கொலை செய்துள்ளது. சர்வதேச சமூகம், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தருணம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
குறைந்தபட்சம் பல உறுப்பு நாடுகளாவது பங்கேற்பதன் மூலம் ஒரே நேரத்தில் அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் இது அவ்வாறு இல்லை என்றால், நிச்சயமாக ஸ்பெயின் அதன் சொந்த முடிவுகளை எடுக்கும்' என தெரிவித்துள்ளார்.
Borja Puig de la Bellacasa /La Moncloa/AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |