விமானத்தில் இருந்த 24 சூட்கேஸ்களில்... கட்டு கட்டாக சிக்கிய பொருட்கள்: அதிரவைக்கும் சம்பவத்தின் வீடியோ காட்சி
பிரேசிலில் தனியார் விமானம் ஒன்றில் சுமார் ஆயிரம் கிலோவிற்கு மேற்பட்ட போதைப் பொருள் கொண்ட கோகோயினை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த புதன் கிழமை ஒரு தனி விமானத்தில் ஸ்பானிஷ் குடிமகன் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். விமானத்தில் இருந்து சுமார் 1304 கிலோ எடை கொண்ட போதை பொருளான கோகோயின் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், பிரேசிலில் இருக்கும் Fortaleza சர்வதேச விமானநிலையத்தில், கடந்த புதன் கிழமை காலை மத்திய காவல்துறையினர், தனியார் விமானம் ஒன்றில் நடத்திய அதிரடி சோதனையில், போதைப் பொருள் இருப்பதை கண்டுபிடித்ததால், ஒரு ஸ்பானிஷ் பயணி மற்றும் விமானத்தின் கேப்டன், இரண்டு விமான ஊழியர்கள்(துருக்கியை சேர்ந்தவர்கள்) ஆகியோர் அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியிருக்கும் வீடியோவில், விமானத்தின் உள்ளே நுழைந்த பொலிசார் அங்கிருக்கும் சூட்கேஸை திறக்க சொல்கிறார். அதன் பின் கத்தியால் துண்டித்து உடைத்து பார்த்த போது, உள்ளே வெள்ளை நிற கோகோயின் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
அதை ஆய்வுக்கான பரிசோதனையில் ஈடுபடுத்திய போது, அது A வகை போதைப் பொருள் என்பது உறுதியானது. மொத்தம் இது போன்று விமானத்தில் இருந்த 24 சூட்கேஸ்களில், சுமார் 1304 கிலோ எடை கொண்ட போதைப் பொருளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு சூட்கேஸிலும் ஒரு பணக் கட்டு போன்று கட்டு கட்டாக சுமார் 50 பிளாஸ்டிக் பைகள் இருந்துள்ளது. விமானம் ஆரம்பத்தில், Ribeirão Preto-வில் இருக்கும் Leite Lopes விமானநிலையத்தில் இருந்து பிரேசிலுக்கு புறப்பட்டுள்ளது.
குறித்த விமானம் குடியேற்ற நடைமுறைகளுக்காக Fortaleza-வில் இருக்கும் சர்வதேச விமானத்தில் தரையிரங்கியுள்ளது. அப்போது பொலிசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய சோதனையிலே இவர்கள் சிக்கியுள்ளனர்.
மேலும், பொலிசார் எப்படி இதை பிடிக்க முடிந்தது என்பது குறித்து மற்றொரு ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், குறித்த விமானம், Fortaleza சர்வதேச விமானநிலையத்தில் தரையிரங்கியதும், உடனடியாக Leite Lopes விமானநிலையத்தை நோக்கி புறப்பட்டது.
அதிகாரிகளுக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அதுமட்டுமின்றி அந்த விமானத்தில் இருந்த சூட்கேஸ்கள் அனைத்து தன்னுடையது என்று அந்த பயணி கூறியுள்ளார். அது குறித்து விளக்கம் கேட்ட போது, பதில்கள் முன்னுக்கு பின் முரண்பாடாக இருந்துள்ளது.
மேலும், விமானநிலைய பணியாளர்களுடன் பேசுவதற்கான அந்த இடத்தை விட்டு வெளியேறும் போது, விமானத்தின் கதவு உடனடியாக மூடப்படுவதை பொலிசார் கண்டதால், அவர்களுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
அதன் பின்னரே மீண்டும் இரண்டாம் நிலை ஆய்வு செய்ய முடிவு செய்த போது, சிக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.