பிரபல ஐரோப்பிய நாட்டில் 3 லட்சம் பெண்கள் தொடர்பில் சபதம் செய்த பிரதமர்
பிரபல ஐரோப்பய நாடான ஸ்பெயினின் பிரதமர் Pedro Sanchez, நாட்டில் பாலியல் தொழிலை தடை செய்ய போவதாக சபதம் செய்துள்ளார்.
Valencia-வில் தனது கட்சி ஆதரவாளர்களிடையே உரையாற்றிய Pedro Sanchez இவ்வாறு அறிவித்தார்.
2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், Sanchez-ன் சோசலிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில், பாலியல் தொழிலை தடை செய்யப்படும் என வாக்குறுதி இடம்பெற்றிருந்தது.
இந்த வாக்குறுதி பல பெண் வாக்களார்களை கவர்ந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறையின் மோசமான வடிவங்களில் ஒன்று பாலியல் தொழில் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், தேர்தல் முடிந்து 2 ஆண்டுகளாகியும், இதுதொடர்பான எந்தவித மாசோதாவும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையில், Valencia-வில் பேசிய Pedro Sanchez, இந்த பாலியல் தொழில் நடைமுறை பெண்களை அடிமைப்படுத்துகிறது என கூறினார்.
மேலும், நாட்டில் பாலியல் தொழில் தடை செய்யப்படும் என Pedro Sanchez உறுதியளித்தார். ஸ்பெயினில் 1995 ஆம் ஆண்டு பாலியல் தொழில் குற்றமற்றது என அறிவிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், ஸ்பெயினில் 3 ஆண்களில் 1 ஒருவர் பணம் செலுத்தி பாலுறவு கொள்கிறார் என தெரியவந்தது.
அதேபோல், ஸ்பெயின் பாலியல் தொழில்துறையின் மதிப்பு 3.7 பில்லியன் யூரோ என 2016ல் ஐ.நா மதிப்பிட்டது.
தாய்லாந்து மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு அடுத்ததாக ஸ்பெயின் உலகின் மூன்றாவது பெரிய பாலியல் தொழில் மையமாக இருப்பதை 2011 ஆம் ஆண்டின் ஐ.நா ஆய்வு காட்டியது.
மேலும், ஸ்பெயினில் சுமார் 3 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலாளியாக வேலை செய்கிறார்கள் எனவும் மதிப்பிடப்பட்டது.
எனினும், இது வர்த்தகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பெரும் நன்மைகளை அளித்துள்ளதாகவும், அவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் பாலியல் தொழில் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.