ரூ 22 கோடி மதிப்பிலான உயர் ரக மதுவை வீணடித்த மர்ம நபர்: ஐரோப்பிய நாடொன்றில் சம்பவம்
ஸ்பெயின் நாட்டில் பிரபலமான மது ஆலையில் மர்ம நபர் நுழைந்து சுமார் 60,000 லிற்றர் மதுவை வீணடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயர் ரக மது
வீணடிக்கப்பட்ட மதுவின் மதிப்பு 2.5 மில்லியன் யூரோ ( இந்திய மதிப்பில் ரூ 22 கோடி) என்றே கூறப்படுகிறது. Cepa 21 என்ற அந்த மது ஆலையின் நிர்வாகிகள் தெரிவிக்கையில், Horcajo மற்றும் Malabrigo ஆகிய உயர் ரக மது வகைகளே அந்த மர்ம நபரால் வீணடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
@afp
ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி விடிகாலை 3.30 மணியளவில் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. மேலும், அந்த மது ஆலை குறித்து நன்கு தெரிந்துவைத்துள்ள ஒருவரே, இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.
கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சியில், அந்த மர்ம நபர் எந்த பரபரப்பும் இன்றி, அந்த ஆலைக்குள் நகர்வதாகவும், பின்னர் மது சேமித்து வைத்துள்ள தொட்டிகளை திறந்து மதுவை வீணடித்துள்ளார்.
மொத்தம் 5 தொட்டிகள்
பொதுவாக பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டிருக்கும் அந்த தொட்டியில், எளிதாக திறக்க முடியாது என்றும், அப்படியான வேலையில் ஈடுபடுபவர்களால் மட்டுமே தொட்டியை திறக்க முடியும் என்றும் Cepa 21 நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
அந்த மர்ம நபர் மொத்தம் 5 தொட்டிகளை திறந்துள்ளார். ஆனால் அதில் 3ல் மட்டும் மது நிரப்பப்பட்டிருந்துள்ளது. Cepa 21 நிறுவனத்தின் Horcajo மதுவானது பிரித்தானியாவில் 80 பவுண்டுகளுக்கும் Malabrigo 35 பவுண்டுகளுக்கும் விற்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |