ஈரானிய மக்களுக்கு பேரழிவு? அடுத்த ஜனாதிபதியின் கோர முகம் அம்பலம்
ஈரானில் அடுத்து ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரவிருக்கும் 60 வயதான Ebrahim Raisi தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரானில் தற்போதைய ஜனாதிபதி Hassan Rouhani-ன் பதவிக்காலம் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், அடுத்த ஜனாதிபதியாக 7 பேர் போட்டியில் உள்ளனர்.
இதில், 60 வயதான Ebrahim Raisi பெரும்பாலும் ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்கலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் Ebrahim Raisi-ன் உண்மை முகம் சர்வதேச ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தலைவருக்கு மிக நெருங்கிய இடத்தில் இருக்கும் Ebrahim Raisi மிகக் கொடூரமானவர் என்றே சமூக ஆர்வலர்களால் அடையாளம் காணப்படுகிறார்.
1980களில் எதிர்க்கட்சியினரை கூட்டம் கூட்டமாக மரணத்தண்டனைக்கு விதிக்கப்பட்ட விவகாரத்தில் இவருக்கு பங்குள்ளதாக கூறப்படுகிறது.
Death Commission என அடையாளப்படுத்தப்பட்ட சம்பவத்தில், பல ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட 1988 விவகாரத்திலும் Ebrahim Raisi முக்கிய பங்காற்றியுள்ளார்.
1980ல் தனது 20ம் வயதில் அரசு சட்டத்தரணியாக பொறுப்பேற்றுக்கொண்ட Ebrahim Raisi, அடுத்த 8 ஆண்டுகளில் தெஹ்ரான் நகரத்திற்கான அரசு சட்டத்தரணியாக பதவி உயர்வு பெற்றார்.
இந்த காலகட்டத்தில் ஈரானிய ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட 3,000 பேர்கள் கைது செய்யப்பட்டு, சில மாதங்களில் படுகொலை செய்யப்பட்டனர்.
1983ல் 8 மாத கர்ப்பிணியான 21 வயது Farideh Goudarzi அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற சித்திரவதை கூடத்திற்கு இழுத்து சென்றதாக சாட்சியம் கூறியுள்ளார்.
தம்மை சித்திரவதை செய்த 7 பேர் கொண்ட குழுவில் Ebrahim Raisi-ம் ஒருவர் என Farideh Goudarzi தெரிவித்துள்ளார். தமது மொத்த குடும்பமும் கைது செய்யப்பட்டு, கொடூரமான சித்திரவதைக்கு பின்னர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டதாக Farideh Goudarzi வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது அல்பேனியாவில் வசிக்கும் Farideh Goudarzi தெரிவிக்கையில், ஈரானின் முதன்மை பதவிக்கு Ebrahim Raisi கொண்டுவரப்படுவார் என்றால், அது ஈரானிய மக்களுக்கும் எஞ்சிய உலக நாடுகளுக்கும் பேரழிவாக மாறும் என குறிப்பிட்டுள்ளார்.